தமிழில்
Volume 05, Issue 04 | October 2025 - December 2025
சூர்யா சேவியரின் திருப்பரங்குன்றம்- முழு வரலாற்று ஆய்வு என்ற நூல் மனித குல வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்நூலின் மிக ஆழமான மொழிநடை மனிதனின் நாகரிக வளர்ச்சிப் போக்கினை எடுத்தியம்புகிறது. ஓர் வரலாற்றின் மூலம் மதமும், அரசியலும், மதச்சார்பின்மையும் ஒருங்கே பயணிக்கும் இலக்கியப் படைப்பாக இந்நூல் திகழ்கிறது. இந்நூலின் வாயிலாக மதத்தைத் தாண்டிய மானுடம் என்ற உண்மை புலப்படும். விஞ்ஞானம் என்பது விடைகளைத் தருவது அல்ல, மாறாக விடைகளைக் கேள்வி கேட்பதன் வழி இந்நூலாசிரியரின் கருத்து காலத்தைக் கடந்தும் நிலைத்து நிற்கிறது. இவரின் வரலாறும் தொல்லியல் ஆய்வுகளும் மேலும் பல ஆய்வுகளை நோக்கிப் பயணிக்கும். பக்தி என்பது வேறு, மதம் என்பது வேறு என்ற வரிகள் இந்நூல் முழுமையும் வேரூன்றிப் பயணிக்கிறது. நீதிமன்றங்களைத் தாண்டியது மனித மனத்தின் நீதி என்ற ஆழமான கருத்தோடு பயணப்பட்ட படைப்பாக இந்நூல் திகழ்கிறது. புதிய நோக்கில் மதச்சார்பின்மையின் தேடலில் மதமும், அரசியலும் : மதத்தைத் தாண்டிய மானுடம் பறைசாற்றும் மறுமலர்ச்சிக் குரலாக சூர்யா சேவியரின் திருப்பரங்குன்றம் - முழு வரலாற்று ஆய்வு என்ற இக்கட்டுரையின் வாயிலாக மதச்சார்பின்மை, அரசியல், மதம் ஆகியவற்றின் வரலாற்றையும் மனிதத் தன்மையின் முக்கியத்துவத்தையும் பல்வேறு வரலாற்றுச் சான்றுகளுடன் காணலாம்.
ச. உஷா (முனைவர் பட்ட ஆய்வாளர்)
முனைவர் பட்ட ஆய்வாளர் ச. உஷா ஆங்கில இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். இவர் தனது இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் பயின்றார். பின்னர் திருச்சி அரசு கலைக் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றிய இவர் தற்போது பேராசிரியர் பி. இரா. வீரமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வை தஞ்சை பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறார். இவரது முனைவர் பட்ட ஆய்வு பிரிட்டிஷ் பெண்ணிய எழுத்தாளர் சாராமாஸ் அவர்களின் நாவல்களையும், அதன் உளவியல், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த சமூகப் பிரச்சனைகளையும் மையப்படுத்தியது. இவர் 5 ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளையும் 3 தமிழ் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். இவரின் கவித்திறமைக்கு கவிதைக் களம் கவிப்பாவை குழுமத்தின் சார்பாக தங்கத்தாரகை விருது பெற்றார். தஞ்சையில் ஏடகம் மகளிர் முற்றம் சார்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பங்கேற்றார். இவர் சுமார் 50 ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் தொடர்பான ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டுள்ளார். பெரியார் பன்னாட்டமைப்பு - அமெரிக்கா நடத்திய திராவிடப் பொழில் இதழின் ஆய்வரங்கில் ஆங்கிலத்தில் மதிப்புரை ஆற்றியுள்ளார்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
Submit your Article
Get In Touch