தமிழில்
Volume 06, Issue 01 | January 2026 - March 2026
இந்தக் கட்டுரை, கார்த்திக் ராம் மனோகரன் எழுதிய *Periyar: A Study in Political Atheism* (2022) நூலில் முன்வைக்கப்பட்ட “பெரியார் தத்துவவாதி அல்ல” என்ற வாதத்தை விமர்சனமுறையில் ஆராய்கிறது. நூலாசிரியர், பெரியாரை “anti-philosopher” எனக் கருதி, அவர் கோட்பாட்டாளர் அல்ல; ஆனால் அவருடைய சிந்தனைகளிலிருந்து கோட்பாடு உருவாகலாம் என வாதிடுகிறார். இதற்கு மாறாக, பெரியாரின் *பிரகிருதிவாதம்* (1934), *தத்துவ விளக்கம்* (1947) நூல்களை முன்வைத்து, பெரியார் தத்துவ விசாரணையாளர் என்றும் தத்துவத்தை செயல்பாடாக மாற்றியவர் என்றும் இக்கட்டுரை வலியுறுத்துகிறது.
தமிழ் காமராசன்
தமிழ் காமராசன் (1985) என்று அறியப்படும் க. காமராசன், ஓர் ஆய்வாளர்; தமிழ்ப் பதிப்புத் துறையில் பணியாற்றும் பதிப்பு ஆசிரியர்; மொழிபெயர்ப்பாளர். தமிழ் இலக்கியத் துறையில் M.A., M.Phil. பட்டங்களை ஈட்டியுள்ளார். பெரியாரும் சில தத்துவ விசாரணைகளும் நூலின் ஆசிரியர். மணிமேகலையில் பௌத்தத் தருக்கம், திருமந்திரப் பதிப்பு முதலான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். மா. சிங்காரவேலர் அவர்களின் சுயராஜ்யம் யாருக்கு? நூலுக்கான செம்பதிப்பைப் பதிப்பித்து உள்ளார். ‘தனித்து ஒலிக்கும் குரல்: ஆ. சிவசுப்பிரமணியனின் நேர்காணல்கள்’ நூலைப் பதிப்பித்துள்ளார். தமிழ்ச் சிந்தனை மரபுகள், தமிழ்த் தத்துவம், மதம், பண்பாட்டு ஊடாட்டங்கள், சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் ஆகியவை இவருடைய விருப்பத்திற்குரிய ஆய்வுக் களங்கள் ஆகும்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
Submit your Article
Get In Touch