தமிழில்
Volume 04, Issue 04 | October 2024 - December 2024
Sulochana, Na. 2024. “Poraattangalum Samooga Needhi Paadangalum”. Dravida Pozhil – Journal of Dravidian Studies 4 (4): 14-24.
திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு அடிவேரும் ஆணிவேர்களுமாக இருப்பவை தமிழின மேம்பாடு, தமிழ்மொழி மேம்பாடு, சமூகநீதி, பகுத்தறிவு ஆகியனவே ஆகும். அத்தனைக்கும் பொதுவாக அமைந்துள்ள ஒரே கோட்பாடு சமூகநீதி தான்.
சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற வேட்கையில் வடஇந்தியாவில், சமூகச் சீர்திருத்தப் புரட்சிக்கு வித்திட்ட சமூகநீதி ஆளுமைகளான சாஹு மஹாராஜ், ஜோதிராவ் புலே, சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் இவர்களின் மாபெரும் பங்களிப்பினால் தான், சமூகநீதியை இன்று வரை, நாம் முன்னெடுக்க முடிகிறது. அவ்வண்ணமே தமிழ்நாட்டில், திராவிடக் கொள்கைகளை முன்னெடுத்த புரட்சியாளர் தந்தை பெரியாரின் அயராத உழைப்புக்குக் கிடைத்த பயனால், 1967இல், சுயமரியாதைத் திருமணச் சட்டம் இயற்றப்பட்டது. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண் புரட்சியாளர்களும் தந்தை பெரியாரின் கருத்தியலை இந்தச் சமூகத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர்.
தந்தை பெரியார் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். அது ஒரு பக்கம் என்றால் பெண்களின் போராட்டங்கள் இன்னொரு பக்கம். வீட்டைவிட்டு வெளிவர இயலாமல் சமூக அடக்குமுறைக்கு ஆட்பட்ட காலங்களில், பெண்களின் போராட்ட வலிமை பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. இன்றைய போராட்டங்களுக்கெல்லாம் முன்னோடியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள் பல போராட்டங்களைக் கையில் எடுத்திருக்கிறார்கள். அது குறித்து அறிந்துகொள்ளும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
முனைவர் நா. சுலோசனா
முனைவர் நா.சுலோசனா (எம்.ஏ., எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி., நெட்.) சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ்மொழி (மற்றும்) மொழியியல் புலத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கற்பித்தலிலும் ஆராய்ச்சியிலும் 18 ஆண்டுகள் பட்டறிவு உள்ளவர். 9 முனைவர் பட்ட ஆய்வாளர்களையும், 25 ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்களையும், 613 முதுகலை பட்ட மாணவர்களையும் உருவாக்கியவர்.
மொழி, இனம், சமூகம் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை ஆய்விதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவர் 10 ஆய்வு நூல்களையும், பதிப்பாசிரியராக 13 நூல்களையும், பொதுப் பதிப்பாசிரியராக 22 நூல்களையும் படைத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் சங்க இலக்கியச் சொற்கள் குறித்தும், வட்டார வழக்குச் சொற்கள் குறித்தும் அறிந்துகொள்ளும் விதமாக ‘மொழி அறிவோம்’ என்னும் வலையொளி வழியாக 500க்கும் மேற்பட்ட பதிவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.
வட்டார வழக்குச் சொல்லாய்வு, ஊர்ப்பெயராய்வு, கரிசல் வட்டார சொலவடைகளைத் திரட்டுவது என மொழி குறித்த ஆய்வுத் தளங்களில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறவர். தமிழ்ப் பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசின் ’இளம் தமிழ் ஆய்வாளர்’ விருது பெற்றிருக்கிறார்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
Submit your Article
Get In Touch