தமிழில்
Volume 05, Issue 02 | April 2025 - June 2025
இக்கட்டுரை கல்வியை சமூக அறிவியல் நோக்கில் ஆராய்கிறது. தந்தை பெரியார் கல்விக்கூடங்களை பகுத்தறிவுக் கூடங்களாகவும், ஒழுக்கக் கூடங்களாகவும், சமூகக் கூடங்களாகவும், அறிவியல் கூடங்களாகவும் எவ்வாறு பார்த்தார் என்பதைக் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. பாடத்திட்டங்களில் எப்படிப்பட்ட பாடங்கள் இருக்க வேண்டும், எப்படிப்பட்ட பாடங்கள் இருக்கக் கூடாது என்பதையும், தமிழர்களின் உயர்வுக்கு அடிப்படையாக தந்தை பெரியார் அவற்றை எவ்வாறு விளக்கினார் என்பதையும், அவை இன்றைய காலத்திற்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதையும் பல்வேறு தலைப்புகளில் இக்கட்டுரை ஆராய்கிறது. “அவரது நுண்ணோக்குப் பார்வை இன்றைய தேர்வு முறைக்கு முன்னோடியாக அமைந்துள்ளதுபோல் தோன்றுகிறது. அவர் வலியுறுத்தும் பகுத்தறிவு (Knowledge), உடல் தேர்வு (Physical Fitness), உலக நடப்பு அறிவு (World Current Affairs) முதலியவை, இன்றைய இந்திய ஆட்சிப் பணியில் (Indian Administrative Service) நடைபெறும் தேர்வு முறைகளை ஒத்துவருவதாக உள்ளன” என இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. மேலும், தந்தை பெரியார் எவ்வாறு “தமிழகம் தழைக்கத் தயங்காமல் கல்வியியல் சிந்தனையை வழங்கிய சிந்தனையாளர்” என்பதையும், அதற்கான தரவுகளுடன் இக்கட்டுரை முன்வைக்கிறது.
முனைவர் உ. பிரபாகரன்
பேரா. முனைவர் உ. பிரபாகரன் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் (பணிநிறைவு) அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
Submit your Article
Get In Touch