திராவிடப் பொழில் வாசகர்களுக்கு அன்பான வணக்கம்!
தொடர்ந்து திராவிடப்பொழில் இதழுக்கு ஆதரவு அளித்து வரும் தங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மிகப்பெரும் தொலைநோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி இதழ், அந்த நோக்கத்தின் வழியில் தொடர்ந்து நடைபோட உங்கள் பெரும் ஆதரவே அடிப்படையாகும்.
இந்த இதழும் தாமதமாகத்தான் வெளியாகிறது. அதற்காக வருந்துகிறோம். இன்னும் சில மாதங்களுக்குள் இதழ்கள் குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் உங்களுக்குக் கிடைக்கும் என்ற உறுதியை அளிக்கிறோம்.
இவ்விதழ் ஐந்து ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகிறது.
இவ்விதழ், 5 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது.
1. நல்லாட்சிக்கான வள்ளுவரின் பத்துக் கட்டளைகள்
2. மறுபிறவி: சங்கரித்தாயனின் ‘பிரவாஹன்’ நூலில் ஒரு புனையப்பட்ட கட்டுக்கதையும் பகுத்தறிவுவாத எதிர்ப்பும்
3. தந்தை பெரியாரின் கல்வியியல் சிந்தனைகள்
4. மனித மாண்புகள் வளர்க்கும் மரபுக் கலைகள்
5. தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வையில் தமிழின் வளர்ச்சியும் எதிர்காலமும்
திராவிடக் கருத்தியல் சார்ந்த இந்த ‘திராவிடப்பொழில்’ கல்விப் புலத்தில் தொடர்ந்து பயணிக்க, வாசகர்களாகிய உங்களையும் அழைக்கின்றோம். ஆய்வுக் கட்டுரைகளை அளிப்பதன் மூலமும், வாசிப்பதன் மூலமும், அவற்றைக் குறித்த உங்கள் பின்னூட்டங்கள் மூலமாகவும் ‘திராவிடப்பொழில்’ இதழ் பயணத்தில் தாங்களும் இணைந்து கொள்ளலாம்.
கல்விப் புலத்தில் ‘திராவிடப்பொழில்’ இதழ் இன்னும் பெருமளவில் சென்று சேர, பகிர்ந்து மகிழக் கேட்டுக் கொள்கிறோம்.
- மதிப்புறு ஆசிரியர் :
முனைவர் இரா.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்.
- ஆசிரியர் குழு
பேரா. முனைவர். மு. நாகநாதன்
பேரா. முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர். சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
முனைவர். வா. நேரு
மரு. சோம. இளங்கோவன்
பேரா. முனைவர் பி.இரா.வீரமணி