அன்பிற்கினிய திராவிடப்பொழில் வாசகர்களுக்கு, மனம் நிறைந்த வாழ்த்துகளோடு இனிய வணக்கம்!
ஆராய்ச்சி இதழாக வெளிவரும் திராவிடப்பொழில் இதழின் பயணம் என்பது மற்ற இதழ்களின் பயணத்தில் இருந்து வேறுபட்டது. திராவிடக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் இந்தத் திராவிடப்பொழில் ஆராய்ச்சி இதழின் பயணத்தில் தங்களை இணைத்துக்கொண்டு ஆதரவு அளித்து வரும் தங்களுக்கு உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மிகப்பெரும் தொலைநோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி இதழ், அந்த நோக்கத்தின் வழியில் தொடர்ந்து நடைபோட உங்கள் பெரும் ஆதரவே அடிப்படை.
இந்த 5 இதழ் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கமாகக் கொண்டு வெளிவருகின்றது.
1. எதிர்ப்புக்குரலாக. எதிர்ப்புக்குரலாக சுயமரியாதை: சுயமரியாதை: சமகாலப் பெண்களின் அனுபவங்கள் குறித்த ஒரு பெரியாரிய பகுப்பாய்வு
2. புதிய நோக்கில் மதச்சார்பின்மையின் தேடலில் மதமும், அரசியலும்.
3. திருக்குறளும் திராவிட இயக்கக் கருத்தியலும்.
4. தந்தை பெரியாரின் மூட நம்பிக்கை ஒழிப்பில் பகுத்தறிவுச் சிந்தனை ஓர் ஆய்வு.
5. பெரியார் குறித்த கேம்பிரிட்ஜ் விளக்கக் கையேடு
திராவிடக் கருத்தியலின் அடிப்படையில் அமைந்த ‘திராவிடப்பொழில்’ கல்விப் பயணத்தில் தொடர்ந்து பயணிக்க, வாசகர்களாகிய உங்களையும் அழைக்கின்றோம். ஆய்வுக் கட்டுரைகளை அளிப்பதன் மூலமும், வாசிப்பதன் மூலமும், அவற்றைக் குறித்த உங்கள் பின்னோட்டங்கள் மூலமாகவும் ‘திராவிடப்பொழில்’ இதழ்ப் பயணத்தில் தாங்களும் இணைந்து கொள்ளலாம்.
கல்விப் புலத்தில் ‘திராவிடப்பொழில்’ இதழ் இன்னும் பெருமளவில் சென்று சேர, பகிர்ந்து மகிழக் கேட்டுக் கொள்கிறோம்.
- மதிப்புறு ஆசிரியர் :
முனைவர் இரா.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு)
- ஆசிரியர் குழு
பேரா. முனைவர். மு. நாகநாதன்
பேரா. முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர். சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
முனைவர். வா. நேரு
மரு. சோம. இளங்கோவன்
பேரா. முனைவர் பி.இரா.வீரமணி