English

View in English

தொகுதி 4, வெளியீடு 1

ஜனவரி 2024 - மார்ச் 2024

நல்வரவு!

திராவிட ஆய்வுகள் குறித்த இந்த இதழ், காலாண்டு தோறும், இருமொழி உள்ளீடுகளோடு, உலக ஆய்வுத் திரட்டிகளில் இணைந்துகொண்டு, நிகர்நிலைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவரும்.

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


ஆராய்ச்சியும் தேடுதல் மனப்பான்மையும் கொண்ட திராவிடப் பொழில் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.

திராவிடப் பொழில் ஆய்விதழ், தனது 4-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில், 12 இதழ்களினூடே ஆராய்ச்சிக் கட்டுரைகளை - இலக்கியம், தொல்லியல் & வரலாறு தொடங்கி, சமூகநீதி, பெண்ணியம் & பகுத்தறிவு வரை - பல்வேறு பொருண்மைகளில் தொடர்ச்சியாக வெளியிட்டு இருக்கிறது. எம்முடன் பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா இணைந்து கொண்டு, அறிஞர்கள் எழுதிய இந்த ஆய்வுக் கட்டுரைகளைப் பொதுமக்களிடத்தேயும் கொண்டு சேர்த்து, உலக அளவிலான பரவலைச் செய்கிறது. இணையவழியாக ஆய்வு அறிஞர்களை அழைத்து, அவர்களை ஆய்வுரை நிகழ்த்தச் செய்து, கட்டுரைகளின் மீதான கேள்விகளை எழுப்பி, அவற்றுக்குக் கட்டுரை ஆசிரியர்கள் மூலமாகவே பதில் அளித்துத், தொடர்ச்சியாக ஊக்கப்படுத்தி வருகிறது.

திராவிட அறிவுப் புலமையை, உலகெங்கும் கொண்டு சேர்க்கும் முகத்தான், புகழ்மிக்க கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் தமிழ்நாடு, இந்தியா & உலக அளவிலான நூலகங்கள் பலவற்றில் திராவிடப் பொழில் ஆய்விதழைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதே எமது நோக்கம். இளைய பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவ மாணவிகள் எல்லோருக்கும் திராவிடப் பொழில் இதழில் பங்களிக்கும் வாய்ப்பினை நல்க வேண்டும் என்பது எமது அவா.

இந்த இதழில் 5 ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

1. பொற்பனைக்கோட்டை அகழ்வாராய்ச்சி (2021-22): சங்க கால வாழ்வியல் குறித்த தரவுகள் 2. தமிழ் வளர்ச்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பங்கு 3. தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர் போராட்டமும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களும் 4. கற்றல் கற்பித்தலில் கலைகளின் பங்கு (ஒயிலாட்டத்தை முன்வைத்து) 5. சுயமரியாதைத் திருமணங்கள் - சமூகமும் சட்டமும்

இந்தக் கட்டுரைகளை வாசியுங்கள். உங்கள் புலத்தில் உள்ள கல்வியாளர்களிடமும் ஆராய்ச்சியாளர்களிடம் பகிருங்கள். விவாதியுங்கள். விவாதிக்கச் சொல்லுங்கள்.

‘மெய்ப்பொருள் காணும் அறிவை’ வளர்த்தெடுக்கும் இக் கல்விப் பயணத்தில், நாம் அனைவரும் இணைந்து பயணிப்போம். ’அனைவருக்கும் அனைத்தும்‘ என்பதே திராவிட அடிப்படை. அவ்வண்ணமே, கல்விச் செல்வத்தையும் ஆய்வுச் செல்வத்தையும் அனைவருக்கும் அறியத் தருவோம்!

-ஆசிரியர் குழு

பேரா. முனைவர். மு. நாகநாதன்
பேரா. முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர். சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
முனைவர். வா. நேரு
மரு. சோம. இளங்கோவன்

இந்த இதழின் உள்ளே